| إِذَا السَّمَاءُ انفَطَرَتْ (1) (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்
 | 
| وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ (2) நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்
 | 
| وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ (3) கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்
 | 
| وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ (4) சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து)
 | 
| عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ (5) ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்
 | 
| يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ (6) மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது
 | 
| الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (7) அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்
 | 
| فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ (8) அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்
 | 
| كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ (9) எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்
 | 
| وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ (10) நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்
 | 
| كِرَامًا كَاتِبِينَ (11) அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்
 | 
| يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ (12) நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்
 | 
| إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ (13) ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்
 | 
| وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ (14) நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்
 | 
| يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ (15) கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்
 | 
| وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ (16) அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது
 | 
| وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (17) (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா
 | 
| ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (18) பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா
 | 
| يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ (19) அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்
 |